Skip to main content

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்




ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும் (குழந்தைகள் உட்பட) சலனப்படவில்லை. அமைதியாக ஒரு ஒழுங்கில் ரயில் ஏறினர், மரணத்தை வரவேற்று..................



"நான் குழந்தைகளை, அவர்கள் இன்றிருக்கும் நிலை குறித்து கனிவோடும், அவர்களின் எதிர்காலம் குறித்த மரியாதையுடனும் அணுகுகிறேன். நாம் அவர்களின் எதிர்காலத்திற்காக, இன்று அவர்களை மகிழ்விக்கும்‍; அழவைக்கும்; வியக்கவைக்கும்; கோபப்படவைக்கும்; ஆர்வப்படவைக்கும் எல்லாத்தையும் மதிக்க தவறுகிறோம், அவர்களின் இன்றைய பொழுதுகளை மூர்க்கமாக களவாடுகிறோம்.

குழந்தைகள் நாளைய மனிதர்கள் அல்ல; மாறாக அவர்கள் இன்றையவர்கள். அவர்களை கவனிக்கவும், கனிவுடனும், மரியாதையுடனும் பழகவும் கோர அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களின் அறியாமையை மதிக்க நாம் கற்க வேண்டும். நீங்கள் இன்னும் வளரவேண்டும்; பாருங்கள், நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்பதை மட்டும் அவர்களிடம் சொல்லாதீர்கள். அவ்வாறு சொல்லும்போது குழந்தைகள் நாம் ஒன்றுக்கும் பயனில்லை, நாம் எப்போது வளர்வோம்" என்கிற ஏக்கத்தை நீங்களே வளர்க்காதீர்கள்.

குழந்தைகள் பெரியவர்களுடைய கடினமான, குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையை புரிந்து கொள்வதில்லை என்பதாலேயே அவர்களை அவமதிப்பு செய்யாதீர்கள். உங்களுடைய கவலை; மகிழ்ச்சி; வியப்பு; கோபம் ஆகியவற்றின் ஊற்றுக்கண் அவர்களுக்கு தெரியாது. அவர்களின் உலகம் எளிதானது, நேர்மையானது. குழந்தைகளை இந்த இடத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் விதிகளை அறியாத, வேற்று மொழி அந்நியர் போல நினைக்க வேண்டும். அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாகவும், மகிழ்ச்சியாகவும் விடை வேண்டும்.

குழந்தைகளின் அறிவு பெரியவர்களின் அறிவினைக் காட்டிலும் குறைவானதும் அல்ல, குறையானதும் அல்ல. அவர்கள் அறிவோடு இல்லாமல் உண‌ர்வுகளோடு சிந்திக்கிறார்கள். அதனாலேயே அவர்களோடு உரையாடுவது என்பது ஒரு கடினமான கலையாகவே உள்ளது. உலகில் எத்தனையோ மோசமான விஷயங்கள் உண்டு. ஆனாலும், தந்தையோடும், தாயோடும், ஆசிரியரோடும் குழந்தைகள் அன்போடும், நம்பிக்கையோடும் இருப்பது பதிலாக அச்சப்படுவதுபோல் மோசமானது எதுவும் இல்லை.

நாம் எதோ ஒரு கோபத்தில்/அறியாமையில் குழந்தைகளுடைய பையில் காணப்படும் அவர்களின் விளையாட்டுப் பொருட்களான சோழி, தீப்பெட்டி, சின்ன வயர், பஸ் டிக்கெட், ஆணி, ரப்பர் பேண்டு, உடைந்து போன பேனா முதலிய பலவற்றை தேவையற்றது என தூக்கிபோட்டு விடுகிறோம். ஒவ்வொரு சின்ன பொருளிற்கும் ஒரு வரலாறும், அவை குழந்தைகளின் கனவோடு சம்பந்தப்பட்டது என்பதையும் முற்றாக மறுதலிக்கிறோம். மனிதத் தன்மையற்ற முறையில் அவர்களின் உடமைகளை தூக்கியெறிந்த நாம் அவர்களிடம் என்ன மாதிரியான பண்புகளை எதிர்பார்க்க முடியும்? நாம் தூக்கியெறிந்தது வீணான பொருட்கள் அல்ல, குழந்தைகளின் கனவுகளையும், ஆசைகளையும்.

குழந்தைகளை நாம் நம்மை தொந்தரவு படுத்தும்போதும், தடங்கல் செய்யும்போதுமே கவனிக்கிறோம். மாறாக அவர்களின் பசுமையான, புதுமையான, அரூபமான தனிமைப் பொழுதுகளை கவனித்திருக்கிறோமா? குழந்தைகள் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் அந்த விந்தையான கணங்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம். இறுதியாக குழந்தைகள் நம் வாழ்வில் விவரிக்க இயலாத ஒரு கவிதை அமைதியை கொண்டு வருகிறார்கள்.

மேற்சொன்ன குழந்தைகள் குறித்த சிந்தனைகளை மீண்டும் ஒரு முறை வாய்விட்டு வாசித்துவிட்டு வாருங்கள். இப்பதிவின் முதல் பத்திக்கும் அடுத்து வந்த பத்திகளுக்கும் உள்ள தொடர்பை இனி நான் சொல்கிறேன். மரணத்தை நோக்கி அநாதை குழந்தைகளோடு பேரணியாய் சென்ற அந்த மனிதனின் பெயர் ஜானுஸ் கோர்சாக்-Janusz Korczak. ஒரு மருத்துவராய் தன் வாழ்க்கை துவக்கிய அம்மனிதர் பின்னர் வந்த நாளில் குழந்தைகளின் உளவியலாளர் ஆனார். இவரின் "LOVING EVERY CHILD" என்கிற நூலில் உள்ள விஷயங்களே நான் சொன்னது.

இவரின் வாழ்க்கை வரலாற்றினை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
(குறிப்பு : இவரின் இந்த நூலினை முழுமையாக இந்த வலை இணைப்பில் படிக்கலாம். நன்றி சொல்லுங்கள் அரவிந்த குப்தா என்னும் மனிதருக்கு. http://vidyaonline.org/arvindgupta/loveeverychild.pdf}

Comments

ரவி said…
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
thoaranam said…
சீரிய நடையுடனான நல்லதொரு பதிவு ஆவலுடன் காத்திருக்கிறேன்!
-முகிலன்
தோரணம்
ramgopal said…
செந்தழல் ரவி மற்றும் முகிலன் ஆகிய இருவருக்கும் நன்றி. அடுத்த பதிவினை எழுதிவிட்டேன்.

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற